Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் பெயரை ஹிந்துஸ்தான் என மாற்ற வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மே 30, 2020 06:17

புதுடெல்லி: இந்தியாவின் பெயரை மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.

இதுகுறித்து டெல்லியை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா என்ற பெயர், ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை தொடர்ந்து நினைவுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்திய அரசியல் சாசனத்தில், இந்தியா என்ற பெயரை, 'பாரதம் அல்லது ஹிந்துஸ்தான்' என, மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு, ஜூன், 2ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக் எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்